வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முடி உதிர்வதை தடுத்து நீளமான முடியை பெற எளிய வழிகள்…
முடி உதிர்தல் :
முடி உதிர்வு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் ஆண் பெண் என இரு பாலரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
முடி கொட்ட காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று கடைகளில் விற்கப்படும் பலவிதமான ரசாயனங்கள் கலந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துவதால் ஒவ்வாமை சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகின்றன.
முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள் :
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் பல உள்ளன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் பழங்கால மக்கள் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி முடியை கடைசி வரை கருமையாகவும், நீளமாகவும் உதிராமல் பாதுகாத்து வந்தனர்.
முடி உதிர்வதை தடுக்க வெந்தயம் :
முடி வளர சித்தர்கள் பரிந்துரைத்த பொருட்களில் ஒன்று மற்றும் அந்தக் காலம் முதல், இந்த காலம் வரை, வெந்தயம் ஒரு பொக்கிஷம்தான்.
வெந்தயம் உடலுக்குத்தான் ஆரோக்கியம் தரும் என்றில்லை அழகிற்கும், சரும ஆரோக்கியதுற்கும் நற்பலன்களை கொடுக்க கூடியது.
கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்த பிறகு அந்த நீரைக் கொண்டு கூந்தலை பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த நீரை எடுத்து கூந்தலை அலச வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் செய்வதன் மூலம் கூந்தல் வலிமை பெரும்.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து அதனை தலைமுடியின் அடிப்பகுதியில் தடவி மசாஜ் செய்தால் பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சி நீங்கும். மேலும் இந்த முறை கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
முடி அடர்த்தியாக வளர :
தலை முடி அடர்த்தியாக வளர வெந்தயக்கீரையை நீரில் போட்டு கொதிக்க விட்டு அதன் பிறகு அதனை எடுத்து தயிர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து தலையில் தேய்த்து நாற்பத்தி ஐந்து நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வெந்தயக்கீரை நல்ல பலனை தரும் ஒருவேளை வெந்தயக்கீரை இல்லாவிட்டால் வெந்தயத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.
பொடுகு தொல்லை நீங்க வெந்தயம் :
பொடுகுத் தொல்லை இருந்தால் அதனைப் போக்குவதற்கு வெந்தயப் பொடியில் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாற்றினை கலந்து கூந்தலுக்கு தடவ வேண்டும்.
நெல்லிக்காய் பொடியில் வெந்தயப் பொடியை சேர்த்து தண்ணீர் கலந்து ஊற வைத்த அந்த கலவையை தலையில் முப்பது நிமிடம் ஊறவைத்து பிறகு குளிக்க வேண்டும்.
முடி உதிர்தலை தடுக்க முட்டை :
சீப்பை எடுத்து தலை சீவும்போது சிலருக்கு வேர்காலுடன் முடி கொத்துக் கொத்தாக உதிரும். தலைக்கு போதிய அளவு சத்து கிடைக்காததே இதற்கு காரணம்.
முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக வளர இயற்கையில் பல வழிகள் உள்ளன. நூறு சதவிகிதம் முடி கொட்டுவதை நிறுத்தி கொட்டிய இடத்தில் அழுத்தமான நல்ல முடியை வளர செய்ய உதவும்.
ப்ரோடீன் சத்து குறைபாட்டால் முடி உதிரும்போது ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து நன்றாகக் கலக்குங்கள் இந்த கலவையை தலையில் பூசி காய்ந்ததும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை இப்படி குளித்து வர முடி உதிர்வது நின்று கருமையாக வளர தொடங்கும். இவ்வாறு வளரும் முடி அவ்வளவு எளிதில் உதிராது.
முடி வளர கற்றாழை :
முடி வளர தேங்காய் பாலில் கற்றாழையை கலந்து கொள்ளுங்கள் முடியை பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் இந்த கலவையை தடவி வட்டமாக மசாஜ் செய்யவேண்டும்.
தேங்காய் பால் பகுதிக்கு ஊட்டம் அளித்து வேர்க்கால்களை பலப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.
முடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை :
முடி கருமையாக வளர எண்ணெய் தயாரிக்க தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கவும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடி, ஹென்னாப் பொடி ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இந்த எண்ணெயை தலையில் தடவி விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். வெந்நீரில் நனைத்து பிழிந்த டவலால் தலையைச் சுற்றி கட்டவும்.
நான்கைந்து முறைகள் இப்படி செய்த பிறகு சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காயை குழைத்து தலையை அலசவும்.
இந்த முறைய வாரம் ஒருமுறை செய்து விரைவில் கூந்தல் உதிர்வது முற்றிலும் நின்றுவிடும்.